இது ஒரு சிறிய காதல் கதை.
முதல் பார்வையிலே என்னை மிகவும் கவர்ந்தாள்,வேற ஒன்றும் யோசிக்காமல் அவளை என்னோடு அழைத்து வந்து விட்டேன் .
அவள் தன் இனிய குரலால் என்னை எப்போதும் செல்லமாக அழைப்பாள் .
நான் என் நண்பர்களிடம் பேசுவதையும் அவள் ரசிப்பாள். அவளால் இந்த உலகமே சுருங்கிய மாதிரி ஆனது.
நான் கோபத்தில் எத்தனையோ முறை தூக்கி எறிந்திருக்கிறேன்.
இருந்தாலும் அவள் என்னுடன் தான் இருந்தாள், அவளுக்கு என்ன கஷ்டமோ தெரியல என்னை விட்டு சென்றுவிட்டாள்.
தொலைந்த இடத்தில் நான் தேடினேன்,கண்களில் நீரோடு.
தொலைந்த வருத்தத்தில் என் வீட்டாரிடம் நடந்ததை கூறினேன். சரி விடு நீ வேற ஒரு நல்ல mobila வாங்கிக்கோன்னு சொல்லி வேற mobila வாங்கி கொடுத்தார்கள்.
மீண்டும் இன்னொரு காதல் கதை ஆரம்பமாகிவிட்டது........
Friday, October 3, 2008
Subscribe to:
Comments (Atom)