Thursday, September 25, 2008

ஒரு விஷயம்

இந்த பக்கத்தில் பொதுவாக நம்மில் சில பேர் ஒவ்வொரு நாளும் பேசும் விஷயத்தை பற்றி சொல்கிறேன். குழந்தை பருவத்திலிருந்து வேலைக்கு செல்வதுவரை உள்ள தினசரி பிரச்சனை இது. சற்று யோசிச்சு பாருங்க, நீங்களும் இவற்றை சந்தித்திருப்பீர்கள்.
யோசிக்க முடியலனா மறுபடியும் ஒரு தடவை யோசிங்க!
சரி விடுங்க ரொம்ப ஓவரா யோசிக்க வேண்டாம் .நம்மால முடிஞ்சது அவ்வளவுதான்.
இந்த பிரச்சனையப் பத்தி தாங்க இப்போ சொல்றேன். என்ன நான் சொல்றது, உங்களுக்கு புரிஞ்சதா? நம்மால முடிஞ்சது அவ்வளவுதான்.
இந்த விஷயத்த எல்லா இடத்திலயும் நாம நினைச்சிருப்போம் (நினைக்காதவர்கள் சும்மா இந்த பக்கத்தை படிக்கனும்னா படிங்க) . உதாராணத்துக்கு,
எட்டாம் classla கணக்கு வாத்தியார் கணக்கு paper கொடுக்கும்போது நாற்பது மார்க்க வாங்கி ஆத்தா நான் கணக்கு பரிச்சைல பாஸ் ஆகிட்டேன்னு சொல்லி சந்தோசத்தில் இருக்கும் போது ,உங்க அம்மா என்னடா நீ வெறும் நாற்பது மார்க் வாங்கிருக்க ,உன் friend மாதிரி நல்ல படிச்சு எழுதுன்னு சொல்றப்ப என்ன நினைச்சிருப்பீங்க ?
அடுத்த தடவை எப்படியாவது நூறு மார்க் எடுத்து அம்மாகிட்டே பாராட்டுவாங்கனும்ன்னு நினைச்சிருப்போம் .ஆனா என்ன நடந்திருக்கும் முதலுக்கு மோசமாகி விடாமல் இருந்தா சரின்னு நினைச்சு அந்த frienda நல்லா திட்டி தீத்துட்டு "நம்மால முடிஞ்சது அவ்வளவுதான் சொல்லி நம்மல நாமே சரி படுத்திருப்போம்".
சரி இத விடுங்க,collegukku சேர்த்து கொஞ்சம் சந்தோசமா சுத்தி சுத்தி வரும் போதும் இதே மாதிரி நிறையவே நடந்திருக்கும்.நான் என்ன தெரிஞ்சு வெச்சுக்கிட்ட செய்யமாட்டேனா சொல்றேன்(பொதுவா labla) .தெரிஞ்சது அவ்வளவுதான் சொல்லி சமாளிச்சிருப்பீங்க !! எப்படியாவது campus interviewla select ஆகனும்னு நினைச்சு நல்லா prepare பன்னிருப்பீங்க ,ஆனா என்ன நடந்திருக்கும்னு தெரியும்,எதாவது ஒரு interviewla பாசாகி இருந்தாலும் ,missana interview பத்தி நினைச்சு பார்த்து "நம்மால முடிஞ்சது அவ்வளவுதான்னு சொல்லி நமக்கு கிடைச்ச வேலையை வைத்து சந்தோசமா இருந்திருப்போம் ."

சரி இந்த பிரிச்சனை முடிஞ்சதுன்னு நினைச்சு தினமும் officukku சென்று கடமை தவறாமல் வேலை பார்ததாலும் இந்த dialogue நம்மல தொரத்தி தொரத்தி வரும் .

சரி நமக்கு மட்டும்தானா இப்படி என்று நினைக்காதீங்க!இந்த மாதிரி நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் . நான் ஒன்னும் psycology எல்லாம் படிக்கல ,சும்மா தெரிஞ்சத வெச்சு சொல்றேன்.

"நம்மால முடிஞ்சது அவ்வளவுதான் " இந்த dialogue சொல்றத வெச்சு நம்மல நாமே கேவலமா பேசுவதாக நினைக்க வேண்டாம் .இந்த மாதிரி ஒவ்வொரு மனிதனும் எண்ணினால் எப்படி முன்னேறுவது?இந்த தாழ்வு மனப்பான்மைய குறைச்சு வாழ்க்கைக்கு தேவையான மன தைரியமும் ,சுய நம்பிக்கையும் (self confidence) இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் .அதுக்காக என்கிட்டே இது நிறையவே இருக்குனு நினைச்சு வாழ்க்கையை வெல்லலாம்னு ரொம்ப கனவு கண்டுகிட்டே இருக்காம ஒழுங்கா அவங்க அவங்க வேலைய நல்லா பாருங்க .இவை அனைத்தும் சேர்ந்ததுதான் வெற்றி.
மீண்டும் அடுத்த பக்கத்தில் எதாவது interesttingana விஷயமா சொல்றேன்.

3 comments:

Rajthilak said...

நல்லா இருக்குடா. முடிஞ்சவரைக்கும் எழுத்துப்பிழை இல்லாமல் எழுது.

kumar said...

thanks anna.i am trying my best.

விக்கி said...

Yes good..